திருநெல்வெலி அல்வாடா!


சென்ற வாரம் திருநெல்வெலியில் மூன்று நாட்கள்...

இந்தப் பயணம் பல வகைகளில் மிகவும் அருமையாக இருந்தது.
==> அந்த ATR-72 டெக்கான் ஏர்வேஸ் விமானம் (சூரன் தலை போல ஆடியது!)

==> வாகைகுளம் - தூத்துக்குடியின் அதி நவீன விமான நிலையம் (ஐதராபாதாவது, பெங்களுராவது - இங்கே வாரும்லா - லக்கேஜ் சீட்டைக் கொடுத்தால், ஒருவர் உங்கள் பெட்டியை தனியாக எடுத்துக் கொடுப்பார் - Last saw this in Hey Ram, when UN goes to Pune with a nubile Vasundara Das - கன்வேயர் பெல்டா? அப்படின்னா? எக்ஸ்-ரே கைப்பைக்களுக்கு மட்டும் தான். இப்போதான் புதுசா லக்கேஜ்க்கும் வாங்கப் போறாங்களாம்)

==> சார்பதிவாளர் அலுவலகம் இரவு 10:30 மணிவரை வேலை செய்த மாயம் (என்னதான் காந்தி நோட்டு வேலை செய்தாலும், இந்த ஒரு கடமை உணர்ச்சியை என்னால் மறக்க முடியாது!)
==> திருச்செந்தூர் சித்ரா பார்க் லாட்ஜ் ரூ. 1500க்கு பல உலக நகரத்து ஹில்டன்களுக்கு, 'இந்த வசதி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?' என்று விடுத்த சவால்
==> முருகனை தரிசித்துவிட்டுத் திரும்பும்போது, அவர் மாமனை நவதிருப்பதியிலும் பார்த்தது (நான் ஸ்ரீ வைகுண்டம் மட்டும் பார்க்க இயலவில்லை - பாழாய்ப் போன கான்ஃபிரன்ஸ் கால்!)
==> கூடவே வந்த அப்பா மற்றும் சுவாரசியமான CK
==> எல்லாவற்றுக்கும் மேலாக திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா!!

ஸ்ரீ வைகுண்டம் முடித்த கையோடு அப்பாவும் CKயும் நேராக சாயங்காலம் ஆறரைக்கு இருட்டுக்கடையில் ஆஜர்.
நெல்லையப்பர் கோயில் வாசலில் இருக்கும் பெயர்ப்பலகையற்ற, இரண்டே இரண்டு பல்புகள் மட்டும் எரியும் இந்தக் கடையில் அன்று ஐம்பது பேர் வரை கும்மியடித்துக் கொண்டிருந்ததாக அப்பாவும் CKயும் சத்தியம் செய்தனர். பிறகு CK முண்டியடித்துக் கொண்டு சில பல கிலோக்கள் அல்வாவை வாங்கி வெற்றித் திருமகனாக மீண்டு வெளியே வந்தது எல்லா அல்வாக்கடைகளிலும் பொறிக்கப் படவேண்டிய செய்தி! நிற்க.


மேலாண்மை மற்றும் பொருளாதார நிபுணர்களின் ஆய்வுக்கு: ஒரு நாளைக்கு இருட்டுக்கடையில் 500 கிலோ அல்வா கிண்டுவதாகவும் அதை அவர்கள் ஒரு கிலோ தலா ரூ. 100க்கு விற்பதாகவும் தமிழ் கூறும் நல்லுலகில் நவில்கிறார்கள். 20% லாபம் என்றால் ஒரு நாளைக்கு ரூ. 10000 ஈட்டும் அந்த கடை சரியான பாதையில் செல்கிறதா? ஒரே ஒரு பொருள் மட்டுமே உற்பத்தி செய்வதால் அவர்களின் தொழிலுக்கு ஆபத்து வந்துவிடாதா?
(டேய்! டேய்! பொட்டலம் மடிக்கறதை நிறுத்து!)


டெயில் பீஸ் #1: ஒரிஜினலுக்கு மிக அருகில் மற்றொரு கடை "திருநெல்வேலி அல்வா கடை" - அல்வாவுக்கே அல்வாவா?


டெயில் பீஸ் #2: இரவு மையிடம் பேசினேன்...

மை: 'இருட்டுக்கடையை விட சாந்தி கடையில் அல்வா நல்லா இருக்கும்'

நான்: 'அது எங்கே இருக்கு?'

மை: 'அடுத்த கடை தாண்டா!'

நான்: 'ஙே'


மேலே உள்ள புகைப்படத்தில் CK இருட்டுக்கடை முன் பெருமிதமாக நிற்பது நியாயமே என்பது என் கருத்து. ஐம்பது பேரைத் தாண்டி அவர் எப்படி சென்றிருப்பார் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும் :-) க்கும்... இங்கே மட்டும் என்ன வாழுதாம்? எடை மிஷினில் ஏறினால் அது 'சுற்றும் பூமி சுற்றும்'னு அழுகை பாட்டு பாடுது!!

பக்கத்தில் 1000 வாட் பல்புகளுடன் இருப்பது சாந்தி அல்வாக் கடை??

Comments